Saturday, May 19, 2012

வில்லினையொத்த புருவம்

வில்லினையொத்த புருவம் வளைத்தனை வேலவா அங்கோர் வெற்பு நொருங்கிப்
பொடிப்பொடியானது வேலவா
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு வள்ளியைக் கண்டு சொக்கி
மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே
கல்லினையொத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண்ணிரண்டாயிரம்
காக்கைக்கிரையிட்ட வேலவா
பல்லினைக்காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பனக்
கோலம் தரித்துக் கரம் தொட்ட வேலவா

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மருகிக்
கருகிப் புகையாய் வெருட்டினாய்
கிள்ளை மொழிச்சிறு வள்ளியென்னும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற
வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய்
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானு கோபன் தலை பத்துக்
கோடித் துணுக்குரக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித்திரியும் சிறு வன மானைப்போல் தினைத் தோட்டத்திலேயொரு
பெண்ணை மணங்கொண்ட வேலவா

ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கின்ப மாகுதே கையில் அஞ்சலெனும் குறி
கண்டு மகிழ்ச்சி யுண்டாகுதே
நீறு படக்கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீக்கியடியரை
நித்தமும் காத்திடும் வேலவா
கூறு படப்பல கோடியவுணரின் கூட்டத்தைக் கண்டு கொக்கரித்தண்டம் குலுங்க
நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவோடு தோன்றுவாய் எங்கள் வைரவி பெற்ற பெருங்கனலே
வடிவேலவா வடிவேலவா வடிவேலவா வடிவேலவா

Saturday, March 19, 2011

கந்த குரு கவசம்

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய
கந்த குரு கவசம்

... விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவா
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.

Sunday, December 19, 2010

திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். 1

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். 2

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். 3

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்*
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி*
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்*
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்*
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 4

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 5

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்*
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?*
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு*
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி*
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை*
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்*
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 6

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து*
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!*
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து*
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்*
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?*
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?*
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய். 7

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு*
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்*
வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்*
கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய். 8

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்*
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்*
மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?*
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?*
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். 9

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!*
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்*
நாற்றத் துழாய்முடி நாராயணன்* நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்* பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்*
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?*
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 10

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து*
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்*
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!*
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்*
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து *நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட *
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி!*நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். 11

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*
நினைத்து முலை வழியே நின்று பால்சோர*
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்*
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்*
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற*
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்*
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!*
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். 12

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்*
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!*
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்*
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். 13

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்*
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்*
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்*
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்*
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!*
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். 14

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?*
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்*
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்*
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக*
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை*
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய். 15

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே!* கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே!* மணிக்கதவம் தாள்திறவாய்*
ஆயர் சிறுமியரோமுக்கு* அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்*
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்*
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!*நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். 16

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்*
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!*
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்*
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த*
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்*
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!*
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். 17

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்*
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!*
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்*
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண்*மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்*
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்*
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 18

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்*
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்*
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்*
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்*
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை*
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்*
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்*
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். 19

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று*
கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்*
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு*
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்*
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்*
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை*
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். 20

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப*
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்*
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்*
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்*
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்*
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே*
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். 21

அங்கண்மா ஞாலத்து அரசர்* அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே*
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே*
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?*
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்*
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்*
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். 22

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து*
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீபூவைப்பூ வண்ணா!* உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக்* கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 23

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி*
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய்! திறல்போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி*
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி*
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி*
வென்றுபகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி*
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்*
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். 24

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்*
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*
தரிக்கிலான் ஆகித் தான்தீங்கு நினைந்த*
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!* உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி*
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 25

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்*
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே*
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே*
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். 26

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 27

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து* உந்தன்னைப்
பிறவி பெறுந்துதனைப் புண்ணியம் யாம்உடையோம்*
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!* உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை*
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீதாராய் பறையேலோர் எம்பாவாய். 28

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து*உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து*நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!*
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்* உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்*
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். 29

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை*
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி*
அங்கப்பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்*
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதைசொன்ன*
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 30

ஆண்டாள் திருவடிகளே சரணம்

Thursday, August 26, 2010

சனி கவசம் (இனிய தமிழில்)

கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்
ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன் ஆதரித் தெம்மைக் காப்பாய்.
பொருளோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்.

ஏழரைச் சனியாய் வந்தும், எட்டினில் இடம் பிடித்தும்,
கோளாறு நான்கில் தந்தும், கொண்டதோர் கண்டகத்தில்
ஏழினில் நின்ற போதும், இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்!

பன்னிரு ராசிகட்கும் பாரினில் நன்மை கிட்ட,
எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறி வழிகள் காட்ட,
எண்ணெயில் குளிக்கும் நல்ல ஈசனே உன்னைத் துதித்தேன்
புண்ணியம் எனக்குத் தந்தே புகழ்கூட்ட வேண்டும் நீயே!

கருப்பினில் ஆடை ஏற்றாய்! காகத்தில் ஏறி நின்றாய் !
இரும்பின் உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்சசி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!

சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்ரட்டாதி,
இனிதே உன் விண்மீனாகும் எழில்நீலா மனைவி யாவாள்
பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்பதென்று சொல்வார்.

குளிகனை மகனாய்ப் பெற்றாய்! குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்துப் பிடித்துக் கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச்செல்வாய் துணையாகி அருளைத் தாராய்.

அன்ன தானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே
மன்னர்போல் வழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்.

மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனி என்றும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்தபோதும் இனிய நாள் ஆக மாற்று!

Tuesday, July 27, 2010

திரு விளக்கு துதி

சீலத் திருவிளக்கே ஸ்ரீ தேவி லக்ஷ்மியே
கோலத் திரு விளக்கே கும்பிட்டேன் நின் அடியை
தில்லை வன நாதனும் சிவகாமி அம்மையும்
சிந்தையிற் கொண்டிருக்க செய்த வினை நீங்கி விடும்
தந்தை தமர்தாய் சார்ந்த குரு அரசும் சிந்தை
மகிழ் வாழ்வை தேவியே தந்தருள்வாய்
தொட்டிலுக்கு பிள்ளையும் தொழுவுக்கு பால் பசுவும்
பட்டறைக்கு நெல்லும் பதித்த மரக்காலும்
உனக்கெரிக்க எண்ணையும் எனக்குண்ண சோறும்
தட்டாமல் தாயே தந்தருள்வாய் தகவுறவே!!!

Thursday, July 15, 2010

எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

அப்பர் முதல் மூவரும், ஆளுடையடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரனாதன்

(எப்போ)

நற்பருவம் வந்து நாதனைத் தேடும்
கற்பனைகள் முற்றக் காட்சி தந்தாள

(எப்போ)

அற்பசுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தைக் காணேன், பொன்னம்பலவாணன்
பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடும் ஈசன் மேலே
காதல் கொண்டேன் வெளிப்படக் காணேன்

எப்படிப் பாடினரோ அடியார்

எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே

(எப்படிப்)

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்தே உன்னையே

(எப்படிப்)

குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்சோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி
கனித் தமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினம்

விநாயகனே வினை தீர்ப்பவனே

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே

(விநாயகனே)

குணானிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

(விநாயகனே)

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கண நாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

(விநாயகனே)

முருகா வா வா!

கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?

சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!

பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)

தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)

ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!

Wednesday, July 14, 2010

நானொரு விளையாட்டு பொம்மையா

நானொரு விளையாட்டு பொம்மையா
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு

நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு

(நானொரு)

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு