Wednesday, July 14, 2010

நானொரு விளையாட்டு பொம்மையா

நானொரு விளையாட்டு பொம்மையா
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு

நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு

(நானொரு)

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு

2 comments:

விஜயன்.கே.எஸ். said...
This comment has been removed by the author.
விஜயன்.கே.எஸ். said...

அற்புதம்...அதியற்புதம்...அத்தனையும் அற்புதம்....தாய்மொழி மற்றும் இறைப்பற்றும் போற்றுதற்குரியது.....வாழ்த்துக்கள்..........