எப்படிப் பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
(எப்படிப்)
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்தே உன்னையே
(எப்படிப்)
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்சோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி காதலினால் உருகி
கனித் தமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினம்
No comments:
Post a Comment