Wednesday, May 16, 2007

விநாயகர் அகவல்

சீதக்களப செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைபாட
பொண்ணுரை ஞானும்பூந்துகிலாடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழகெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழமுகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குசாபாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளிமார்பும்
சொற்பதங் கடந்த தூரிய மெஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஹிகக் களிறே
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப்பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனிற்புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரம் இது பொருளென
வாடாவகை தான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புற கருணையி லினிதெனக்கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக்கருளிஸ்
மலமொரு நான்குந் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆரா தாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப்பேச்சுரை அறுத்தே
இடையிங் கலையில் எழுத்தறிவித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக்
குண்டலி யதனிற்கூடிய அசைபை
விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகதூலமுஞ்சதுர் முகசூட்சமும்
என் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையுந் தெரிசனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை அறிவித்தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக்களைந்து
வாக்கு மனமுமில்லா மனோலயந்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிடமென்ன
அருள் தரும் ஆனந்தத்தழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச்
சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவா யாப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேதமும் நீறும் விளக்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கருத்தினரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயகர் விரைகழல் சரணே

3 comments:

பதியம் said...

அருமையான பதிவு

Unknown said...

நன்றி உங்கள் முயற்சிக்கு. எழுத்துப் பிழைகளைத் திருத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.
உதாரணம்: அங்குசா பாசமும் ( பதிந்தது)
அங்குச பாசமும் ( சரியானது)

Unknown said...

உமாசங்கருக்கு.
என் பெயர் ரத்தினசாமி. நானும் உங்அகளைப் போலவே அருவையில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்பவன்.