Wednesday, May 16, 2007

சிவன் - புத்திர பாக்கிய பதிகம்

குழந்தை வேண்டுவோர் படிக்க வேண்டிய பதிகம்:

இப்பதிகத்தை 48 நாட்கள் காலையும் மாலையும் அன்புடன் ஓதி, திருவெண்காடு பெருமானை ஒரு முறை வணங்கினால், நல்ல பிள்ளையைப் பெறலாம் என்பது தமிழ் வேதத்தின் ஆனையாகும். இவ்விரதம் அனுட்டிப்பவர்கள் தினமும் காலையில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளித்தல் மிகவும் நலன் தரும்.

திருச்சிற்றம்பலம்

1 - கண்காட்டு நுதலானுங், கனல் காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும், பிறைகாட்டு சடையானும்
பண்காட்டும் இசையானும், பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

2 - பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டாம் ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

3 - மண்ணொடு நீர், அனல், காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண், பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடம் விரும்பினனே

4 - விடமுண்டமிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறாவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகு என்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின்பூ மறையக்
கடல் விண்ட கதிர் முத்தநகை காட்டும் காட்சியதே

5 - வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு நன்மறையவன் தன்
மேல் அடர், வெங்காலன், உயிர், விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

6 - தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஓண் மதியநுதல் உமை ஓர் கூறு உகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பலஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே

7 - சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம்பணிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே

8 - பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோவில்
கண் மொய்த்த கருமஞ்சை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே

9 - கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளர்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர் அறியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே

10 - போதையர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர், பிரிமின், அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர்வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே

11 - தன்பொழில் சூழ் சண்பையர் கோன் தனிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச்சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே

திருச்சிற்றம்பலம்

நன்றி: இந்துஸ்லேடீஸ் சித்ரா

No comments: