சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே உன்னைச்
(சொல்லாத)
கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ
கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச்
(சொல்லாத)
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையில்லா நின் திருப்புகழினை நான் பாட
அன்பும் அறனெறியும் அகமும் புறமும் நாட
அரஹரசிவ குக மால் மருகா என
அனுதினம் ஒருதரமாகினும் உன்னைச்
No comments:
Post a Comment